Tuesday, 17 September 2019

        மழை



மழை என்னும் காதலியின் வருகைக்காக
காத்திருந்த  காதலன் (பூமி )மண்...

காற்று என்ற நண்பனிடம்
தூது அனுப்பியது..

காற்று சிலிர்த்தது மேகம் கருத்தது
காற்றும் மேகமும் காதல் சேதி சொன்னது

மழை காதலி வந்ததும் காதலன் உயிர்த்தெழுந்தான் ...

மண் வாசம் வீசி
மழையை வரவேற்றான்..

மழை வரும் சேதி அறிந்து
குயில்கள் பாட்டு பாடி,
மயில்கள்  ஆட்டம் ஆடி
அவர்களை ஆரவாரம் செய்தன...

மழை மண் மீது படர்ந்து
அது வெள்ளமாய் பூமியை தழுவி
தன் காதலை அச்சாரம் இட்டு சென்றது...

Friday, 20 July 2018

சிநேகம்...


சினேகா
உனக்கு ரசிகர்
அனேகம்
உன் முன்பு தங்கம் வெறும்  உலோகம்
உன் பெயரே நான்
தினமும் உச்சரிக்கும் சுலோகம்
எனக்கு நீதானே உலகம்
வாழ்நாள் முழுதும் வேண்டும்
எனக்கு உன் சிநேகம்

Thursday, 19 July 2018

ரயில் பயணம்...

ரயில் பயணத்தில்
சன்னலோரம் நீ!
லேசாக அசையும் உன்  கூந்தல்
காற்றில் கோலம் வரைய..
என் பார்வை உன்பக்கம் ஈர்த்தது....
இளஞ்சூரியனின் ஒளியில் மின்னும் தங்க தாரகையாக நீ....
காதோர முடி வருட
சிலிர்த்தது உன் கன்னம் ....
சத்தமே இல்லாமல்
சுண்டி இழுக்கும் தோற்றம்....
உன்னை பார்த்த அக்கனமே
என் இதயம்  உன்பின்னே ...
ஆவலோடு காத்திருக்கிறேன்
உன் விழி அம்பு
என் மீது பாய!
உன் குருப்பார்வை
என் மீது படுமா....?




Friday, 13 July 2018

காதலுக்கு மருத்துவ சான்று...



மருத்துவ பரிசோதனை செய்தேன் இன்று
இரத்த அழுத்தம் அதிகமாம்
உன் ஓரப்பார்வையாலா...
இரும்பு சத்து குறைவாம்
உன் காந்த கண்கள் ஈர்த்தனவோ...
இதயமே இல்லை என்றார்
அது உன்னிடம் அல்லவா உள்ளது...
காதல் நோயால் தாக்குண்ட என்னை
நீ மீட்பது எந்நாளோ...

Tuesday, 10 July 2018

கனவு தேவதை....



என் கனவில்...
இளம் பிறை பொட்டுடன், சிரிக்கும் கண்கள்..
மென்மையாக எனை வருட மயில் தோகை...

பச்சை மேலாடை அழகி எனை
வா வா என்றழைக்க...
நெருங்கி வரும் போது
தடுக்கும் செந்நிற வளையல்...

பொல்லாத மயக்கமும்
சொல்லாமல் தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க...

 இவள் அழகிய நிலவோ?-
தோகை விரித்துஆடும் மயிலோ?-
தேன் ஊறும் மலரோ?

கண் அசைவில், மான் விழியாளோ?-
சிலிர்க்கும் பனி துளியோ?
நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ?

ஓ தேவலோக அழகி இவள் தானோ ...
கனவே கலையாதே...
அழகியை நேரில் காணும் வரை..