Tuesday, 10 July 2018

கனவு தேவதை....



என் கனவில்...
இளம் பிறை பொட்டுடன், சிரிக்கும் கண்கள்..
மென்மையாக எனை வருட மயில் தோகை...

பச்சை மேலாடை அழகி எனை
வா வா என்றழைக்க...
நெருங்கி வரும் போது
தடுக்கும் செந்நிற வளையல்...

பொல்லாத மயக்கமும்
சொல்லாமல் தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க...

 இவள் அழகிய நிலவோ?-
தோகை விரித்துஆடும் மயிலோ?-
தேன் ஊறும் மலரோ?

கண் அசைவில், மான் விழியாளோ?-
சிலிர்க்கும் பனி துளியோ?
நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ?

ஓ தேவலோக அழகி இவள் தானோ ...
கனவே கலையாதே...
அழகியை நேரில் காணும் வரை..

No comments:

Post a Comment