Friday, 20 July 2018

சிநேகம்...


சினேகா
உனக்கு ரசிகர்
அனேகம்
உன் முன்பு தங்கம் வெறும்  உலோகம்
உன் பெயரே நான்
தினமும் உச்சரிக்கும் சுலோகம்
எனக்கு நீதானே உலகம்
வாழ்நாள் முழுதும் வேண்டும்
எனக்கு உன் சிநேகம்

Thursday, 19 July 2018

ரயில் பயணம்...

ரயில் பயணத்தில்
சன்னலோரம் நீ!
லேசாக அசையும் உன்  கூந்தல்
காற்றில் கோலம் வரைய..
என் பார்வை உன்பக்கம் ஈர்த்தது....
இளஞ்சூரியனின் ஒளியில் மின்னும் தங்க தாரகையாக நீ....
காதோர முடி வருட
சிலிர்த்தது உன் கன்னம் ....
சத்தமே இல்லாமல்
சுண்டி இழுக்கும் தோற்றம்....
உன்னை பார்த்த அக்கனமே
என் இதயம்  உன்பின்னே ...
ஆவலோடு காத்திருக்கிறேன்
உன் விழி அம்பு
என் மீது பாய!
உன் குருப்பார்வை
என் மீது படுமா....?




Friday, 13 July 2018

காதலுக்கு மருத்துவ சான்று...



மருத்துவ பரிசோதனை செய்தேன் இன்று
இரத்த அழுத்தம் அதிகமாம்
உன் ஓரப்பார்வையாலா...
இரும்பு சத்து குறைவாம்
உன் காந்த கண்கள் ஈர்த்தனவோ...
இதயமே இல்லை என்றார்
அது உன்னிடம் அல்லவா உள்ளது...
காதல் நோயால் தாக்குண்ட என்னை
நீ மீட்பது எந்நாளோ...

Tuesday, 10 July 2018

கனவு தேவதை....



என் கனவில்...
இளம் பிறை பொட்டுடன், சிரிக்கும் கண்கள்..
மென்மையாக எனை வருட மயில் தோகை...

பச்சை மேலாடை அழகி எனை
வா வா என்றழைக்க...
நெருங்கி வரும் போது
தடுக்கும் செந்நிற வளையல்...

பொல்லாத மயக்கமும்
சொல்லாமல் தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க...

 இவள் அழகிய நிலவோ?-
தோகை விரித்துஆடும் மயிலோ?-
தேன் ஊறும் மலரோ?

கண் அசைவில், மான் விழியாளோ?-
சிலிர்க்கும் பனி துளியோ?
நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ?

ஓ தேவலோக அழகி இவள் தானோ ...
கனவே கலையாதே...
அழகியை நேரில் காணும் வரை..

Friday, 6 July 2018

திருடி ....




 என் இதயம் திருடியவளே
கவிதையால் வருடியவளே...
நீ பருகிய நீர் தித்தித்தது
நீரை  தேனாக்கியவளே
என் இதயத்தை கரையவைத்தவளே..
நீ மலைத்தேன்
உன்னை கண்டு நான் மலைத்தேன்
 நித்தமும் உன்னை நினைத்தேன்
காதலில் திளைத்தேன்
நீ வர வேண்டும் என
விழைந்தேன்
உன்னுடன் சேர துடித்தேன்
ஏன் இவ்வளவு காதல் உன்மேல் என வியந்தேன்
உன்னுடன் இரண்டற கலந்தேன்...

Wednesday, 4 July 2018

இயற்கையே மருந்து....

சர்க்கரை நோய்க்கான எளிய, இயற்கை மருந்து, நம் வாயிலேயே இருக்கு !
அது உமிழ்  நீராக இருக்கு  !

◆ சர்க்கரை நோய்க்கும் வாயில்  ஊறும் உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம்  ?
◆ உணவுடன் கலந்து  செல்லும்  உமிழ்நீர் தான், கணயத்தில் இன்சுலினை சுரக்க தூண்டுகிறது  !
◆ கூடுதலாக உமிழ் நீர் சுரக்க  செய்வதற்காக, ஊறுகாையைச் சிறிதளவு எடுத்துக்  கொண்டனர் நம் முன்னோர்கள்
◆ " தூண்டல், துலங்கல்" என்ற  விதியின்படி, உமிழ்  நீர்  என்ற தூண்டுதலால், இன்சுலி்ன் என்ற
துலங்கல் சுரக்கச் செய்தனர்...

◆எனேவ, நாம்  சாப்பிடும்போது, உணவை  மெதுவாக மென்று, ரசித்து, ருசித்து, சாப்பிட வேண்டும் !

இயற்கையே மருந்தாகும் ...