Friday, 29 June 2018
இதய தாரகை.....
என் இரவை திருடும் தாரகையே
காணும் எங்கும் உன் பிம்பம்
என் நெஞ்சை பந்தாடிச் சென்றவளே..
உன் இமை அசைவும்
என் காதில் இசை மீட்டுதடி...
உன் ஓரப் பார்வை
என் கண்களுக்கு மின்னலடி...
உன் அழகிய இடை அசைவில்
என் மனம் ஊஞ்சலாடுதடி....
உயிர் உருகுதே உன்னை தேடி
காதல் என்பது இதுதானோ...
தெரியாத பாஷை பேசி போனாய்
புரியாத துயரம் தந்துச் சென்றாய்...
காற்றாய் மாறி தழுவணுமே
மழையாய் மாறி நனையணுமே...
நடு ஜாமத்தில் விழிக்கிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்...
தேகம் தீயாய் எரிந்திடுதே காய்ச்சல் கொதித்திடுதே...
என்ன விலை கொடுத்து உன்னை
வாங்கிக் கொள்வேன்...
அழகே என் உயிர் நீ தானே
என்னை முழுவதும் இழந்தேனே...
காதல் ....
நெஞ்சுக் குள்ள ஒலிந்தவளே
மனசுகுள்ள ஆசையா ரசிச்சவளே..
கனவுகளை கல்லெறிஞ்சு சிரிச்சவளே..
நாடி நரம்புக்குள் பெயர் பதிச்சவளே...
கண்ணுகுள்ளாரே ஓடியாடி திரிஞ்சவளே..
இதயத்தில் இடம் வாங்கி அமர்ந்தவளே..
காதல் என்பது உன்னை பார்த்தபின் தான் உனர்ந்தேன்..
இது காதலா , இச்சையா ....
ஒரு நாள் ஆவது உன்னுடன் வாழ்ந்தால் போதும் என நினைக்கவில்லை...
வாழ் நாள் முழுதும் நீயே வேண்டும்
என நினைப்பதால் அது காதல்...
எனவே நான் உன்மேல் இச்சை கொள்ளவில்லை, உன்னை காதலிக்கிறேன் ...
நீ வேண்டும் வாழ்நாள் முழுதும்
என் காதல் மனைவியாக...
என் மரண படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
பெண்ணே உன் படைப்பு மிக அழகு...
பெண்ணே உன் படைப்பு மிக அழகு ...
உன் புருவம் அழகு
வில்லாய் என்னை வளைத்தாயே
அதுவும் அழகு...
உன் கருவிழி அழகு
காந்தம் போல் என்னை ஈர்த்தாயே
அதுவும் அழகு...
உன் இதழ்கள் அழகு
பேசாமல் பேசி கொல்லுவாயே
அதுவும் அழகு...
உன் விரல் அழகு
உன் குறும்பு தீண்டலால் ஏங்கவைத்தாயே
அதுவும் அழகு..
உன் வெட்கம் அழகு
அதில் என்னை சிறை பிடித்தாயே அதுவும் அழகு...
விடி காலை வான் அழகு
விடியும் வரை பெண்ணே நீ அழகு
விடிந்த பின் உன் வாசம் அழகு...
உன் புருவம் அழகு
வில்லாய் என்னை வளைத்தாயே
அதுவும் அழகு...
உன் கருவிழி அழகு
காந்தம் போல் என்னை ஈர்த்தாயே
அதுவும் அழகு...
உன் இதழ்கள் அழகு
பேசாமல் பேசி கொல்லுவாயே
அதுவும் அழகு...
உன் விரல் அழகு
உன் குறும்பு தீண்டலால் ஏங்கவைத்தாயே
அதுவும் அழகு..
உன் வெட்கம் அழகு
அதில் என்னை சிறை பிடித்தாயே அதுவும் அழகு...
விடி காலை வான் அழகு
விடியும் வரை பெண்ணே நீ அழகு
விடிந்த பின் உன் வாசம் அழகு...
என் மனக்கும் மல்லிகையே....
என்னவளே அடி என்னவளே...
மணக்கும் மல்லிகை போல்
மனதை மயக்கும் காந்தக் கண்கள்..
உன் விழித்தீண்ட
யாசிக்கும் என் கவிதைகள் ..
லேசாய் கலைந்த கேசம்
என்னை செய்தது சிறை வாசம்..
அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்! ஏன்னெனில்
உன் கலைந்த கோலமும் அழகாய் தோன்றுவதாலே..
வில்போன்று வளைந்த புருவம்
அம்பெய்து திருடியது மனதை...
உன் சிவந்த பொட்டு
செவ்வாணத்தின் மாலை நிலா ..
கொடி இடையே
சொக்கி தான் போனேனே ..
சிலிர்க்கும் நாணத்துடன்
மைதீட்டிய கண்களால் மையலுடன்
எனக்காக காத்திருக்கும்
என்னுயிரே ....
Subscribe to:
Posts (Atom)