என்னவளே அடி என்னவளே...
மணக்கும் மல்லிகை போல்
மனதை மயக்கும் காந்தக் கண்கள்..
உன் விழித்தீண்ட
யாசிக்கும் என் கவிதைகள் ..
லேசாய் கலைந்த கேசம்
என்னை செய்தது சிறை வாசம்..
அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்! ஏன்னெனில்
உன் கலைந்த கோலமும் அழகாய் தோன்றுவதாலே..
வில்போன்று வளைந்த புருவம்
அம்பெய்து திருடியது மனதை...
உன் சிவந்த பொட்டு
செவ்வாணத்தின் மாலை நிலா ..
கொடி இடையே
சொக்கி தான் போனேனே ..
சிலிர்க்கும் நாணத்துடன்
மைதீட்டிய கண்களால் மையலுடன்
எனக்காக காத்திருக்கும்
என்னுயிரே ....
No comments:
Post a Comment