என் இரவை திருடும் தாரகையே
காணும் எங்கும் உன் பிம்பம்
என் நெஞ்சை பந்தாடிச் சென்றவளே..
உன் இமை அசைவும்
என் காதில் இசை மீட்டுதடி...
உன் ஓரப் பார்வை
என் கண்களுக்கு மின்னலடி...
உன் அழகிய இடை அசைவில்
என் மனம் ஊஞ்சலாடுதடி....
உயிர் உருகுதே உன்னை தேடி
காதல் என்பது இதுதானோ...
தெரியாத பாஷை பேசி போனாய்
புரியாத துயரம் தந்துச் சென்றாய்...
காற்றாய் மாறி தழுவணுமே
மழையாய் மாறி நனையணுமே...
நடு ஜாமத்தில் விழிக்கிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்...
தேகம் தீயாய் எரிந்திடுதே காய்ச்சல் கொதித்திடுதே...
என்ன விலை கொடுத்து உன்னை
வாங்கிக் கொள்வேன்...
அழகே என் உயிர் நீ தானே
என்னை முழுவதும் இழந்தேனே...
No comments:
Post a Comment